விருத்தாசலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்

விருத்தாசலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்
முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்
விருத்தாசலம் தீர்த்த மண்டப தெரு நண்பர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சிவிஜி வெங்கடேசன், நகர் மன்ற உறுப்பினர்கள் சிங்காரவேல், புருஷோத்தமன், கருணாநிதி மற்றும் ஆர். கே மணி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story