மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா

மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழாவில் மும்மதத்தினரும் கலந்து கொண்டு விநாயகருக்கு பூஜை செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு சாலையில் உள்ள காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்ட மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மூன்று மதத்தைச் சார்ந்தவர்களும் பங்கேற்றனர். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வேங்கை ராஜா, அபுதாஹிர், அப்பாஸ் மந்திரி, அலியார், அப்துல் ரகுமான், பாரதி, நூர் முகமது, ஜோதிராமலிங்கம், முகமது ஹாரூன் ரஷீத், முகமது இம்ரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட மத நல்லிணக்க சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் ஒன்றிணைந்து பங்கேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். இந்நிகழ்வில் கொழுக்கட்டை, சுண்டல், அவல்பொரி மற்றும் பல வகைகள் அனைத்தும் படைக்கப்பட்டு சிறப்பாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
Next Story