தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு
மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள கவனை கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்த ஜெயராம் மகன் பழனிமுத்து (36). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் வேல்முருகன் ஆகிய இருவருக்கும் இடையே வேலி வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வேல்முருகன்; பழனிமுத்துவை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியதில், காயமடைந்த பழனிமுத்து சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story