மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூர் குப்பமேட்டுப்பட்டியில் மாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன், கருப்பணசுவாமி, முனியப்பன் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. இங்கு கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று முடிவு எடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைடுத்து இன்று கும்பாபிஷேக விழாவிற்கு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பூஜை, லட்ச்சார்ஜனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டு காலையாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை இரண்டாம் காலை ஆக வேண்டி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை கலசத்திற்கு உற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
Next Story