என் எஸ் கே நகரில் கொலை செய்யும் நோக்கோடு தந்தையை தாக்கிய மகன் கைது.

என் எஸ் கே நகரில் கொலை செய்யும் நோக்கோடு தந்தையை தாக்கிய மகன் கைது.
என் எஸ் கே நகரில் கொலை செய்யும் நோக்கோடு தந்தையை தாக்கிய மகன் கைது. கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற முருகேசன் வயது 54. இவர் அப்பகுதியில் கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் சுகேஷ் வயது 27. இந்நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், முருகேசன் வாங்கி வந்த சம்பளத்திலிருந்து ரூபாய் 500-ஐ சுகேஷ் செலவு செய்ததை முருகேசன் தட்டி கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த சுகேஷ் தனது தந்தை என்றும் பாராமல் தகாத வார்த்தை பேசி திட்டியதோடு, நூல் கட்டரை எடுத்து, அவர் மார்பு மீது கொலை செய்யும் நோக்கோடு தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தந்தையை கொலை செய்யும் நோக்கோடு தாக்கிய சுகேசை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story