புறம்போக்கு நிலத்தில் இரு தரப்பினரிடையே தகராறு

புறம்போக்கு நிலத்தில் இரு தரப்பினரிடையே தகராறு
இரண்டு பேரை அறிவாளால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சி பட்டவர்த்தியை சேர்ந்தவர் நாகராஜ் (45). இவருக்கு கீழத் தண்ணீர் பள்ளியில் செல்லும் சாலையில் 3 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இதை மேல தண்ணீர் பள்ளியை சேர்ந்த மணி ஆக்கிரமிப்பு செய்ததில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நாகராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் அறிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் மணி, விஜய் ஆகிய 2 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு
Next Story