பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்: பயணிகள் உற்சாக வரவேற்பு!

பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்: பயணிகள் உற்சாக வரவேற்பு!
கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி - நெல்லை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. 
திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் (ரயில் எண். 06668) பல போராட்டங்களுக்கு பின்பு மீண்டும் இன்று (செப்.9) முதல் மீண்டும் இயக்கப்பட்டு காலை 08.15 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் பிரேமா முருகன், மற்றும் பயணிகள் ரயில் வண்டிக்கு வரவேற்பு அளித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் மணியாச்சி காவல் நிலையஆய்வாளர் மூக்கன் மற்றும் தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இந்த ரயில் வண்டி காலை 08.47 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் வந்தது.
Next Story