காயத்ரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். ஆண், பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

காயத்ரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். ஆண், பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
காயத்ரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். ஆண், பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு , திருமால் நகர் 3-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 49. இவரது உறவினர் கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா கொளந்தா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி செல்வி வயது 45. இவர்கள் இருவரும் நேற்று செப்டம்பர் 8ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ஈரோடு- கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம், கரூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட, காயத்ரி நகர் அருகே சென்றபோது எதிர்திசையில் TN 47 AD 9137 என்ற எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் டிரைவர் வேகமாக ஓட்டி வந்து, சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலர் ரோடு கீழே விழுந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சரவணனை மீட்டு கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையிலும்,பின்னால் அமர்ந்து வந்த செல்வியை மீட்டு கோவையில் உள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர் காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story