பாரதியார் நகரில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாதே தாயார் திட்டியதால் பள்ளி மாணவி விரக்தியில் தூக்கி தற்கொலை.

பாரதியார் நகரில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாதே தாயார் திட்டியதால் பள்ளி மாணவி விரக்தியில் தூக்கி தற்கொலை.
பாரதியார் நகரில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாதே தாயார் திட்டியதால் பள்ளி மாணவி விரக்தியில் தூக்கி தற்கொலை. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வடக்கு காந்திகிராமம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவி மனைவி புஷ்பா வயது 53. இவரது மகள் இன்பராணி (எ) மீனா வயது 17.இவர் அருகில் உள்ள காந்திகிராமம் அரசு உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார் இந்நிலையில் மீனா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக செப்டம்பர் 8ஆம் தேதி காலை 10 மணி அளவில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியதால் அவரது தாயார் புஷ்பா செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாதே என கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மீனா காலை 10:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை அறிந்த அவரது தாயார், உடனடியாக தனது மகளை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மீனா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீனாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story