சுப்ரமணியர் சுவாமிக்கு வளர்பிறை ஷஷ்டி சிறப்பு பூஜை....

X
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாவடி திடல் வளாகத்தில் உள்ள அருள்மிகு சுப்ரமணியர் கோயிலில் ஷஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அருள்மிகு சுப்ரமணியர் சுவாமிக்கு வளர்பிறை ஷஷ்டியையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியயை வழிபட்டு சென்றனர்.
Next Story

