சங்கராபுரத்தில் எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு

சங்கராபுரத்தில் எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு
பேச்சு
முப்பெரும் விழாவை வெற்றி பெறச் செய்வோம் வருகின்ற தேர்தலில் மீண்டும் தளபதியின் தலைமையில் ஆட்சியை நிலைநாட்டுவோம் சங்கராபுரத்தில் எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் பேரூர் கழக திமுக  சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தாகப்பிள்ளை மண்டபத்தில் அவைத் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை செயற்குழு உறுப்பினர் கமருதின் சேர்மன் திலகவதி நாகராஜன் நகர துணை செயலாளர்கள் இம்தியாஸ் ,லட்சுமி செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகிக்க பேரூர் கழக செயலாளர் துரை தாகபிள்ளை வரவேற்புரை ஆற்றினார்,இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பேசியதாவது வருகிற செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள், 16 ம்தேதி திமுக உதயமான நாள் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள்,இந்த தேதிகளில் அனைத்து நகர பேரூர் கழகத்திலும் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அண்ணா பெரியார் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், கல்வெட்டு கொடி கம்பத்தில் கழகக் கொடி ஏற்றுதல்,புதிய உறுப்பினரை சேர்த்தல்,உள்ளிட்ட பணிகளை அனைத்து பொறுப்பாளர்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும் சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் குறித்து பேசினார்.
Next Story