பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா
விழா
சங்கராபுரத்தில், ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையருக்கு பாராட்டு விழா நடந்தது. மத்திய கலால் உதவி ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சண்முக சுந்தரம். தமிழ் ஆவர்வலரான இவர், முத்தமிழ்ச் சங்க நிர்வாகி. இவருக்கு முத்தமிழ்ச்சங்கம் சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. தேவபாண்டலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்றார். சங்கராபுரம் பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி, அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன், அரிமா மாவட்ட தலைவர் வேலு, முத்தமிழ்ச் சங்க பொருளாளர் அம்பேக்கர், சங்கைத் தமிழ்ச் சங்க தலைவர் சுப்பராயன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், பாண்டலம் அரிமா சங்க தலைவர் ஏழுமலை உட்பட பலர் வாழ்த்தி பேசி நினைவுப் பரிசு வழங்கினர். சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினார்.
Next Story