காதலில் கருத்து வேறுபாடு, தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (28). இவர் ஒரு பெண்ணை காதலித்து அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தேடி உள்ளனர். நேற்று காலை நல்லூர் வல்லக்குளம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர். குழந்தைவேல் தந்தை மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.
Next Story