வேலாயுதம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு

வேலாயுதம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு
வேலாயுதம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா தோட்டக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ராதா வயது 41. செப்டம்பர் எட்டாம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே, அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம், நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் அந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தோட்டக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராதாவுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து, சம்பவம் நடந்ததை உறுதி செய்த அவர், இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்துள்ளனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? இது தற்செயலாக நடந்த விபத்தா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story