குளித்தலையில் முதல் பெண் சார் ஆட்சியர்

குளித்தலையில் முதல் பெண் சார் ஆட்சியர்
ஐஏஎஸ் சுவாதி ஸ்ரீ இன்று பொறுப்பேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டத்திற்கு புதிய சார் ஆட்சியராக முதல் பெண் ஐஏஎஸ் சுவாதி ஸ்ரீ பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு சேலம் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக இருந்து குளித்தலை வருவாய் கோட்டத்திற்கு சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற சார் ஆட்சியருக்கு நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வருவாய் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக பொறுப்பேற்றுக் கொண்ட சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களிடம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Next Story