தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு

X
விருத்தாசலம் பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு டீக்கடையில் அனுமதி இன்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் அனுமதி இன்றி புகையிலைப் பொருட்கள் விற்ற குற்றத்திற்காக கலியபெருமாள் மகன் ராஜசேகர் (வயது 21) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

