ஆலத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய எம்எல்ஏ மாணிக்கம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், திமுக தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story