இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
விசாரணை
கள்ளக்குறிச்சியில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், புலியங்குடி சேர்ந்த மகேந்திரன் மகள் உமாமகேஸ்வரி,18. இவர், கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன், வந்து தங்கியுள்ளார்.கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற உமாமகேஸ்வரி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர், கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story