கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
வாணாபுரத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வாணாபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜா, தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். இதில் மின்னணு பயிர் ஆய்வு, கணக்கெடுப்பு பணி புறக்கணிப்பு, மதிப்பூதியம், தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். கிராம நிர்வாக அலுவலர்கள் தோப்புக்காரன், சங்கர், இதயத்துல்லா, ராஜ்குமார், ஆனந்த், அந்தோணி பாஸ்கர், உஷா, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story