கரூரில், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.

கரூரில், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.
கரூரில், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை. தமிழக வணிகர் சங்க பேரவை தலைவராக செயல்பட்டு வந்தவர் வெள்ளையன் அவர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களையும் ஒருங்கிணைத்து வணிகர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் வணிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட வணிகர் சங்கம் சார்பில், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் வெள்ளையன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி கரூர் வர்த்தகர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜூ தலமையில் மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாவட்ட பால் வணிக சங்க தலைவர் பழனிச்சாமி, அம்மன் அருள் செல்வம், மாவட்ட வர்த்தக சங்க செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் மரியாதைக்குரிய சங்கத்தின் தலைவர் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Next Story