ஆவாரம்காட்டுபுதூர்- டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்.

ஆவாரம்காட்டுபுதூர்- டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்.
ஆவாரம்காட்டுபுதூர்- டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள, தெற்கு நல்லியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜர் என்கிற ராமநாதன் வயது 60. இவர் செப்டம்பர் 8-ம் தேதி காலை 9:15- மணி அளவில், சேலம் - கரூர் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ஆவாரம் காட்டுப்புதூர் பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, ராமநாதன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமநாதனின் மனைவி செல்வராணி வயது 44 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story