புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா

எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராசாப்பட்டியில் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிக்குமார், கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலம், திமுக தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story