விசிக சார்பில் கட்சி கொடி ஏற்றும் விழா

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு வீரவணக்கம்
கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலராஜபுரம் ஊராட்சி ஆண்டிபாளையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது வீரவணக்க நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதற்கு கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொ.மகாமுனி என்கிற வன்னியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். இதில் கரூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் துரை செந்தில், அருள், ஜவகர், மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், மகளிர் அணி சாந்தி சட்டக்கல்லூரி மாணவர் ரஞ்சித், விஜயகுமார், நங்கவரம் பேரூர் பொறுப்பாளர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆண்டிபாளையம் உதயகுமார் நன்றி கூறினார்.
Next Story