அரவக்குறிச்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அரவக்குறிச்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அரவக்குறிச்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவின் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் 185 ஆவது ஆய்வை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரவக்குறிச்சி தொகுதி, வேலம்பாடி ஊராட்சியில் உள்ள சௌந்தராபுரம் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியது. பள்ளிக்குள் சென்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும், மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தொடுதிரையின் வாயிலாக, உயிரினங்களின் பெயர்களை கூறுமாறு மாணாக்கர்களை கேட்டுக் கொண்டார். அப்போது மாணாக்கர்கள் அதற்குரிய பதிலை அளித்தனர். இதில் திருப்தி அடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொடர்ந்து மாணாக்கர்களை நன்றாக படிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Next Story