இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்

இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்
மாநில முதன்மைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பல்லடம் பகுதியில் இந்து முன்னேற்றம் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.வடுகபாளையம் கிருஷ்ணா நகரிப் துவங்கிய ஊர்வலத்தை இந்து முன்னேற்ற மாநில முதன்மை செயலாளர் ஹரி கிருஷ்ணன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.இதில் விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி வடுகபாளையம் பகுதியில் தொடங்கி உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பு மற்றும் நால்ரோடு பகுதி வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் இளைஞர் மேள தாளங்கள் முழங்கி நடனமாடியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.இறுதியாக பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.
Next Story