தாராபுரம் சாலையில்கார் மீது நேருக்கு நேர் மோதிய வேன்
Palladam King 24x7 |11 Sep 2024 12:51 PM GMT
பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
பல்லடம் தாராபுரம் சாலையில் குடிநீர் இணைப்பு பராமரிப்பு பணிக்காக நகராட்சி ஊழியர்கள் குழி தோண்டி வேலை செய்து வருகின்றனர்.இதனால் பல்லடம் தாராபுரம் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.இன்னிலையில் ருத்ராவதியில் இருந்து சொகுசு காரில் பழனிச்சாமி மற்றும் வெற்றி செல்வி தம்பதி கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஒரு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர் புறமாக வந்த தனியார் ஹேட்சரீஸ் வேன் வந்து கொண்டிருந்தது.வாகனத்தை பார்த்ததும் பழனிச்சாமி தனது காரின் வேகத்தை குறைத்து நிறுத்தினார்.ஆனால் எதிரே வந்த வேன் காரின் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி மற்றும் அவரது மனைவியை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்பு சம்பவ இடம் சென்ற போலீசார் அப்பகுதியில் ஏற்பட்ட வாகன போக்குவரத்தை சரி செய்தனர்.காரும் வேனும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story