தனியார் பேருந்து மோதி தாய், தந்தை, மகன் படுகாயம்

தனியார் பேருந்து மோதி தாய், தந்தை, மகன் படுகாயம்
தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (38). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது மனைவி, மகனை பின்னால் அமர வைத்துக் கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியும் அதன் பின்னால் வந்த மற்றொரு கார் மோதி விபத்தானது. இதில் பைக்கில் வந்த சரவணன், அவரது மனைவி ராதா, மகன் அஸ்வின் ஆகிய 3 பேர் காயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு
Next Story