தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் நகரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் அனிஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஜீபூர் ரஹ்மான் கலந்து கொண்டார். வருகின்ற 16 9 2024 திங்கட்கிழமை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கோவை கருமத்தம்பட்டி முற்றுகைப் போராட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story