எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா

எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நிறுவனர் தினவிழா, குறள்மலைச் சங்க வெள்ளி விழா, ஆசிரியர் தின விழா, நூல் வெளியீட்டு விழா, பாரதியார் விழா ஆகிய ஐம்பெரும் விழா தாளாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை, தமிழ் பல்கலைக்கழக, அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை, தலைவர் குறிஞ்சி வேந்தன், வடலூர் தலைமை சன்மார்க்க மன்றம், சத்திய சங்க மாநில தலைவர் அருள்நாகலிங்கம், குறள்மலைச் சங்கம் நிறுவனர் மற்றும் தலைவர் ரவிக்குமார், புது டெல்லி குறள்மலைச் சங்கம் சோமாஸ்கந்தன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். தாளாளர் மதிவாணன் எழுதிய மானுடம் எனும் பொக்கிஷம் என்ற புத்தகத்தை சிறப்பு அழைப்பாளர்கள் வெளியிட்டனர். விழாவையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
Next Story