டிராக்டரில் சிக்கி டிரைவர் பலி!
Pudukkottai King 24x7 |12 Sep 2024 4:06 AM GMT
விபத்து செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்துாரை சேர்ந்தவர் சுப்பிரமணி(47). இவர் நேற்று முன்தினம் டிராக்டர் டிரக்கில் விறகு ஏற்றிக்கொண்டு திருச்சி சாலையில் உள்ள தனியார் எடை மிஷினில் எடை பார்ப்பதற்காக நிறுத்திவிட்டு, கீழே இறங்கி நின்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென விறகுடன் இருந்த டிரக் நகர்ந்ததில் நிறுத் துவதற்காக ஓடிய சுப்பிரமணி தடுமாறி கீழே விழுந்தார். இதனால் டிரக் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story