தந்தை,மகன் மீது தாக்குதல்: சகோதரர்களுக்கு வலை!
Pudukkottai King 24x7 |12 Sep 2024 4:07 AM GMT
குற்றச் செய்திகள்
கீரனூர் அருகே நார்த்தாமலையில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. இதில் வாலிபர்கள் சிலர் நடனமாடியபடி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந் நிலையில் ஊர்வலம் நிறைவடைந்து நார்த்தாமலை சிவலிங்கபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் வீட்டுக்கு நடந்து சென்றபோது, மூலிப்பட்டியை சேர்ந்த அடைக்கலம் மகன்கள் சந்தோஷ், அரவிந்த் ஆகிய இருவரும் சேர்ந்து உருட்டு கட்டை மற்றும் கற்களால் தாக்கினர். இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story