மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் விநியோகம்

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் விநியோகம்
விநியோகம்
ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குநர் சியாம்சுந்தர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: ரிஷிவந்தியம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கு தேவையான உயர் விளைச்சல் தரும் நெல் விதை ஆடுதுறை 54, உளுந்து வம்பன் 8, வம்பன் 11 ரக விதைகள், உயர் ரக மக்காசோள விதை, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் இடுப்பொருட்களை பணம் செலுத்தி வாங்குகின்றனர்.இதனை எளிமைப்படுத்தும் வகையில் இடுபொருட்களுக்கான தொகையை ஏ.டி.எம்., கார்டு மற்றும் கூகுள்-பே மூலம் செலுத்தலாம். இதற்காக வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பரிவர்த்தனை செய்ய பி.ஓ.எஸ்., கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த எளிய முறை சேவையை பயன்படுத்தி விவசாயிகள் இடுபொருட்களை வாங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story