கழக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

ஆண்டிபாளையத்தில் நடைபெற்றது
மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியபடி, திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் தெற்கு மாநகரம், பல்லடம் சட்டமன்ற தொகுதி‌, ஆண்டிபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 54-வது வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்ட கழகத்துக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர,பகுதி வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story