திமுக அரசின் திட்டங்களை வீடு வீடாக சென்று சேர்க்க வேண்டும்: அமைச்சர்
Thoothukudi King 24x7 |12 Sep 2024 5:59 AM GMT
கயத்தாறு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்
. தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கயத்தாறு மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், கருப்பசாமி, கோவில்பட்டி நகரமன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் துரைப்பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கிருஷ்ணன், எட்டுராஜ், கருமாரியம்மாள், ஒன்றிய பொருளாளர் ரஹ்மத்துல்லா, கயத்தாறு பேரூர் திமுக செயலாளர் சுரேஷ் கண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story