பரமத்தி அருகே புதிய வீட்டுமனைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

பரமத்தி அருகே புதிய வீட்டுமனைகளை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மதிவேந்தன்.
பரமத்தி வேலூர்,செப்:12. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள படமமுடிபாளையத்தில் மகிழ் என்ற நிறுவனம் புதிய வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த வீட்டு மனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வீட்டு மனைகளை திறந்து வைத்தனர். இவ்விழாவில் திமுக மாணவரணி அமைப்பாளர் மகிழ் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தனராசு,போரூர் செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story