ராமகவுண்டன் புதூர்- டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து முதியவர் படுகாயம்.

ராமகவுண்டன் புதூர்- டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து முதியவர் படுகாயம்.
ராமகவுண்டன் புதூர்- டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து முதியவர் படுகாயம். கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 66. இவர் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9 :45- மணியளவில், கோவை-கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ராமகவுண்டன்புதூர் மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது, அதே சாலையில் பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம், தாமரைகுள தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார் ராமலிங்கம் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த ராமலிங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமலிங்கத்தின் மகன் சியாம்குமார் வயது 44 என்பவர், அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story