தலைமை தபால் நிலையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

தலைமை தபால் நிலையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
தலைமை தபால் நிலையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கோவை சாலை, மாதாகரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் பாட்ஷா வயது 64. இவர் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 10 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர் பஜார் சாலையில் அவரது எலக்ட்ரிக் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தலைமை தபால் நிலையம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள கொளத்தூர், தெற்கு தெருவை சேர்ந்த மருது பாண்டியன் வயது 29 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ஜஹாங்கீர் பாட்சா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜஹாங்கீர் பாஷாவுக்கு வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜகாங்கீர் பாட்ஷா அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மருதுபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story