ரஷ்யாவின் மலைச்சிகரத்தின் மீது ஏறி கழுகுமலை வாலிபர் சாதனை
Thoothukudi King 24x7 |12 Sep 2024 10:44 AM GMT
ரஷ்யாவில் மலைச்சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்த கழுகுமலை இளைஞருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
ரஷ்யாவில் உள்ள 5595 அடி உயரம் கொண்ட எல்பிரஸ் மலைச்சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்த முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த விவசாயி நல்லசாமி என்பவரது மகன் வெங்கடேஷ் சுப்ரமணியன் நேற்று சென்னையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனை நேரித்து சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Next Story