கருப்பம்பாளையம் பிரிவு டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற பின் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து. பெண் படுகாயம்.
Karur King 24x7 |12 Sep 2024 10:51 AM GMT
கருப்பம்பாளையம் பிரிவு டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற பின் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து. பெண் படுகாயம்.
கருப்பம்பாளையம் பிரிவு டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்ற பின் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து. பெண் படுகாயம். கரூர் மாவட்டம், கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 40.இவர் கரூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி வயது 37. இவரது உறவினர் மணி. நாகஜோதியும், மணியும் செப்டம்பர் 8ஆம் தேதி இரவு 8:45 மணி அளவில், சேலம் - மதுரை பைபாஸ் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். மணி வாகனத்தை ஓட்ட பின்னால் நாகஜோதி அமர்ந்து சென்றார். இவர்கள் சென்ற வாகனம் கருப்பம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்ற போது, மணி டூ வீலரை வேகமாக இயக்கியதால், பின்னால் அமர்ந்து வந்த நாகஜோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகஜோதியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகஜோதியின் கணவர் ராஜா அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story