ஆவாரம் காட்டுப்புதூர் பிரிவு- டூவீலரில் சென்றவர் வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

ஆவாரம் காட்டுப்புதூர் பிரிவு- டூவீலரில் சென்றவர் வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
ஆவாரம் காட்டுப்புதூர் பிரிவு- டூவீலரில் சென்றவர் வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், க.பரமத்தி, தெற்கு நல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் என்கிற ராமநாதன் வயது 60. இவர் செப்டம்பர் 8-ம் தேதி காலை 9:15 மணியளவில், சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், ஆவாரம்காட்டுபுதூர் பிரிவு அருகே சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், ராமநாதன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமநாதனின் மனைவி செல்வராணி வயது 44 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படும் வகையில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story