வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல் ஒருவர் படுகாயம்.
Karur King 24x7 |12 Sep 2024 11:17 AM GMT
வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல் ஒருவர் படுகாயம்.
,வெங்கமேடு அருகே டூவீலர்கள் மோதல் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, போத்ராவுத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் வயது 42. இவர் தற்போது கரூர்,ராமானுர் 6-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9:30 மணி அளவில், கரூர்- வாங்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள பூபதி மளிகை கடை அருகே சென்ற போது, அதே சாலையில் வேகமாக வந்த,கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கிழக்கு புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சீவிகுமார் வயது 31 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சந்திரசேகரன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த சந்திரசேகரனுக்கு வலது கால் முட்டி, கால் பாதம், இடது முழங்கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சஞ்சய் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story