தங்க நகரில் விதவைப் பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.
Karur King 24x7 |12 Sep 2024 12:44 PM GMT
தங்க நகரில் விதவைப் பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை.
தங்க நகரில் விதவைப் பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை. கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு காலணி, காமராஜ் நகர், முதல் கிராசை சேர்ந்தவர் லோகேஸ்வரன் வயது 51. இவர் தற்போது அருகில் உள்ள அருகம்பாளையம் தங்க நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் வயது 25. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த ஒரு விதவை பெண்ணுடன் கார்த்திகேயன் தொடர்ந்து அலைபேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கார்த்திகேயன் தந்தை லோகேஸ்வரன் கண்டித்ததுடன் திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த கார்த்திகேயன் செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 6 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனைப் பார்த்து அவரது தந்தை அதிர்ச்சி அடைந்து, தனது மகனை உடனடியாக மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஸ்வரன், இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கார்த்திகேயன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story