ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவு! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
Namakkal King 24x7 |12 Sep 2024 1:31 PM GMT
அரசு பள்ளிகளில் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை தேவையில்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் புகுந்து சேதப்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பரமத்தி பிஜிபி கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்.... தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என பாராட்டுகின்றனர் ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன். 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க முடியவில்லை.60 சதவிகிதம் நிதி மத்திய அரசு தான் வழங்க வேண்டும்.இத்திட்டத்தை செயல்படுத்துவதில் கேரளா முதல் இடமும், தமிழ்நாடு இரண்டாமிடம் இருக்கும் நிலையில் மத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலைக்கு மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தினால் தான் நிதி வழங்க முடியும் என மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அண்ணா, கலைஞர் ஆகியோர் ஏற்கனவே சமச்சீர் கல்வி கொள்கையை ஏற்படுத்தி விட்டனர். தமிழக முதல்வர் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வரும். 2026 க்குள் 19 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்து வருகின்றோம்.தமிழக அரசு பள்ளிகளில் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை தேவையில்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.பள்ளி வளாகத்தில் புகுந்து சேதப்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு பள்ளிகளில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 18 ஆயிரம் வகுப்பறைகளில் சுற்றுச்சுவர்,கழிவறை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.இதுவரை 3500 வகுப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள 3500 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் திறக்கப்படும்.இந்தாண்டு 1000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 200 கழிப்பறை திறக்கப்பட்டன மேலும் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறை தேவைப்படுவது குறித்து ஆய்வு செய்து கட்டித்தரப்படும். கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளதால் இதுவரை 1.50 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் மேலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம் என்று மாநில பள்ளிகளின் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story