ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டே வாகனத்தை ஓட்டும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..
Rasipuram King 24x7 |12 Sep 2024 1:48 PM GMT
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டே வாகனத்தை ஓட்டும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் செல்லும் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. மேம்பால பகுதியில் வளைவு இருப்பதால் அடிக்கடி விபத்து உயிர் சேதங்கள் ஏற்படுவது வழக்கம் இந்த நிலை நேற்று வாலிபர் ஒருவர் சேலம் செல்லும் ரயில்வே மேம்பாலத்தில் ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் சாலையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் படுத்தபடியே சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். எதிரே வாகனத்தை வருவது கண்ட வாலிபர் திடீரென்று இரு சக்கர வாகனத்தில் இருந்து எழுந்து செல்லும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுபோல இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.. மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் இதே போல் பைக் சாகசம் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து இது போன்ற செயல்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் இதை பார்த்து செய்யக்கூடிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது என பலர் தெரிவிக்கின்றனர்.
Next Story