கட மலைக்குண்டில் ஓட்டலை உடைத்து பணம் திருட்டு காவல்துறையினர் விசாரணை
Andippatti King 24x7 |12 Sep 2024 3:45 PM GMT
கடமலைக்குண்டுவை சேர்ந்த ரமேஷ் என்பவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகின்ற நிலையில் கடையில் திருட்டு நடைபெற்றதால் போலீசார் விசாரணை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைகுண்டு என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் ரமேஷ் வயது 39 .இவர் அதே கிராமத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். திரும்பவும் மறுநாள் காலையில் பார்க்கும் பொழுது கடையை உடைத்து கல்லாவில் இருந்த ரூபாய் 28,000 தை திருடி சென்று விட்டதாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story