மின்சாரம் தாக்கி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி மாணவர் பலி
பலி
திருக்கோவிலுாரில் மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.திருக்கோவிலுாரை சேர்ந்தவர் வேலு மகன் கமலேஷ்,19; இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கலை கல்லுாரியில் பி.எஸ்சி., கணினி அறிவியல் முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வீட்டில் குளித்து கொண்டிருந்த கமலேஷின் கை அருகில் உள்ள மின்ஒயரின் மீது பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி கமலேஷ் கீழே விழுந்தார். உடன் அவரது குடும்பத்தினர் கமலேஷினை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கமலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story