தாழையூத்தில் மாணவர் அதிரடி கைது

தாழையூத்தில் மாணவர் அதிரடி கைது
கைது
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து விலக்கு அருகே சந்தேகத்தின் பேரில் பைக்கில் வந்து வாலிபரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவர் பாலிடெக்னிக் மாணவர் என்பதும் அவரது பைக்கில் 300 கிராம் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story