நெல்லையில் நாளை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு

நெல்லையில் நாளை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு
டிஎன்பிஎஸ்சி தேர்வு
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் இரண்டு ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாளை நடைபெறுகிறது.நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 20000 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு வசதியாக முக்கிய பகுதிகள், பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிந்த பின் செல்வதற்கும் போதிய பஸ் வசதியை ஏற்பாடு செய்ய போக்குவரத்து துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story