முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது!!
Thoothukudi King 24x7 |13 Sep 2024 9:02 AM GMT
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரவு, 28 என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இரவு 12.30 மணியளவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு உடலில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் ஒருவர் வந்தார். துாத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த கார்த்திக், 22, என கூறிய அவர், சிலர் தன்னை கத்தியால் குத்தி தாக்கியதாக மருத்துவர்களிடம் கூறினார். மதுபோதையில் இருந்த அவருக்கு மணிகண்ட பிரபு சிகிச்சை அளித்து உள்நோயாளியாக அனுமதித்தார். தொடர்ந்து, அதிகாலை 3.45 மணியளவில் எக்ஸ்ரே எடுப்பதற்காக கார்த்திகை மருத்துவர்கள் சிலர் எழுப்பினர். அப்போது, திடீரென மணிகண்ட பிரபுவை அவர் தாக்கியதுடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், பணி செய்யவிடாலும் தடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் மணிகண்ட பிரபு புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். அவருக்கு, முதுகு மற்றும் வலது தோள்பட்டையில் வெட்டுக் காயம் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story