பெரிய குளத்து பாளையத்தில் மது போதையில் பீடி கேட்டு தகராறு. கத்தியால் காயப்படுத்திய இளைஞர் கைது.
Karur King 24x7 |13 Sep 2024 10:56 AM GMT
பெரிய குளத்து பாளையத்தில் மது போதையில் பீடி கேட்டு தகராறு. கத்தியால் காயப்படுத்திய இளைஞர் கைது.
பெரிய குளத்து பாளையத்தில் மது போதையில் பீடி கேட்டு தகராறு. கத்தியால் காயப்படுத்திய இளைஞர் கைது. கரூர் மாவட்டம், வெங்கமேடு, பெரிய குளத்து பாளையம் அருகில் உள்ள பட்டவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் வயது 47. இவரது மாமா பாலசுப்பிரமணி என்பவர், செப்டம்பர் 10ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வெங்கமேடு விவிஜி நகர் பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் மகன் செந்தில்குமார் என்கிற சின்னா வயது 23 என்பவர், மது போதையில் உறங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணிய எழுப்பி அடிக்கடி பீடி கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சதாசிவம் செந்தில்குமார் என்கிற சின்னாவை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சின்னா தான் வைத்திருந்த சிறிய அளவிலான கத்தியால் சதாசிவத்தை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் சதாசிவத்திற்கு வயிறு, முகம், தாடை, மற்றும் இடது காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி அவருக்கு மிரட்டலும் விடுத்துள்ளார் சின்னா. பாதிக்கப்பட்ட சதாசிவத்தை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சதாசிவம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக செந்தில்குமார் என்கிற சின்னவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story